கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று 2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது .

 

 

 


















 












 வரதன்

கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று காலை(2024.05.06)   2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை  ஆரம்பமாகியது இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று ஐந்து கல்வி வலயங்களிலுமுள்ள பரீட்சை நிலையங்களில் அதிக உஷ்ண நிலையான கால நிலைக்கு மத்தியிலும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் காலையில் இறை ஆசீர்வாதம் மற்றும் பெற்றோர்களின் வாழ்த்துக்கள் உடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இணைப்பு பரீட்சை 14 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை மாவட்டத்தில் 10037  பாடசாலை பரீட்சாத்திகளும் 3865 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

  இதே வேளை  மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 13826 ஆங்கில மொழி 66 மூலம் சிங்கள மொழி 10 மூலம் பரிட்சைக்கு தோற்றுவதுடன் இவர்களுக்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளும் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதே வேளை சகல பரீட்சை நிலையங்களுக்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 139 02 பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்