ரயில் ஒன்று கோட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயில் ஒன்று கோட்டை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

ரயில் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது நடைமேடைமோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, ரயிலின் முன் பகுதியும், நடைமேடையின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள மட்டத்தில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.