மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப் பேற்றுள்ளார்.

 


 





வரதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிராமிய வைத்தியசாலைகளின் சேவைகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்க  சுகாதார தரப்பினருடன் இணைந்து பணியாற்ற அரச திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்புக்கள் மிக முக்கியமானதாகும்- கிழக்கு மாகாண சுகாதார சேவை கள் பிரதிப்பணிப்பாளர்-வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப் பேற்றுள்ளார்.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பா ளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுணியா  மாவட்ட வைத்திய சாலைக்கு  பணிப்பாளராக  வைத்தியர் ஜீ.சுகுணன் சென்றுள்ளதை தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது  கடமைகளை பொறுப் பேற்றுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன் உள்ளிட்ட ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் வரவேற்றதைத் தொடர்ந்து தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை இன்று ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது