காத்தான்குடியில் அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!
































(கல்லடி செய்தியாளர்)

அரச பதவி நிலை உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களைக் கொண்ட  இரண்டாம் மொழி சிங்களக் கற்றைநெறிக்கான இறுதி நாள் கலை விழா நிகழ்வு காத்தான்குடி ஹிழுறிய்யா முன்றலில்  அமைக்கப்பட்டிருந்த சிங்கள பாரம்பரியங்களை வெளிக்கொணரரும் வகையில் அமைந்த மேடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இரண்டாம் மொழி சிங்கள பாட இணைப்பாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உளவளத்துணை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ஜவாத் மற்றும் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.யஸீர் அரபாத் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது 150 மணித்தியாலக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த பதவி நிலை உத்தியோகத்தர்களின் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தன.

நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் 87 பேர் இக்கற்கைநெறியினைப் பூர்த்தி செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் பயிற்சி நெறியின் வளவாளர்களான  செல்வி எம்.யசோதரணி
மற்றும்  திருமதி ஜே.கல்பணி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளதனர்.

அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலகக் கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.