ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் (2024.04.21) ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில்
ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது , அந்த வகையில் மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைமைக் காரியாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .