60,000 பேர் கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 


கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.