மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.

 


 





















 ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன்  ( 21.04.2024)  ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில்   மட்டக்களப்பு  கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், திருப்பலி நிகழ்வுகள்    முன்னெடுக்கப்பட்டன , அந்த வகையில்  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி  வேண்டி இன்று மட்டக்களப்பு புனித செபஸ்தியார்  தேவாலயத்தில்  உயிரிழந்தவர்களின் 5ம் ஈண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.  உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகையின்   முன்பாக சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டது
அருட்தந்தை நவரெத்னம் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட ஆலய பங்குமக்கள் கலந்து கொண்டனர்.