மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கழகங்களுக்கு இடையிலான பிரதேசமட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெபர் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில்
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே . ஈஸ்பரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார் .
விளையாட்டு போட்டிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசமட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையே நடாத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் கழக விளையாட்டு அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரி விளையாட்டுக் கழக அணியினர் விளையாட்டு விழாவில் பல்வேறு விளையாட்டுக்களில் வெற்றி பெற்று பல பரிசுகளை சுவீகரித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.