சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் . கவன ஈர்ப்பு போராட்டமும் .













































மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து  ஏற்பாடு செய்த படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவிய லாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும்  இன்று மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி வளாகத்தில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி மலர அஞ்சலியும் செலுத்தப்பட்டது  நினைவு பேருரைகளும் இங்கு இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம்  இடம்பெற்றது. இன்றைய இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் ,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்து கொண்டனர்