மாணவ செயற்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ செயற்பாட்டாளரான சஞ்ஜய ஹெட்டிமுல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிடிவதை சம்பவங்கள் மற்றும் மாணவர்களை தடுத்து வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே செய்யப்பட்டுள்ளார்.