பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!




பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (01) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த உயர்ஸ்தானிகர், அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து கேட்டறிந்ததோடு, ஈழத்தமிழர்களின் அரசியல் களத்தில் தாம் கொண்டிருக்கும் கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.