மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கௌரவிக்கப்பட்டார்

 

 


மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கௌரவிக்கப்பட்டார்
இந்த வைபவம் இன்று காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகம் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா ஹம்சாதலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார் நழீமி,
காத்தான்குடி பிரதேச செயலக உதவி செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் பணிப்பாளர் எம்.ஐ.அஜ்வத், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பக மாணவிகளின் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கான காப்பக அடையாள அட்டையையும்
அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.