அரசடி தேவநாயகம் மண்டபத்தில் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு.

 

 














 எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்தும் முன்னால் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் அவர்களின் 2 புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை. மட்டக்களப்பில் இடம் பெற்றது.தமிழ் - சிங்கள மொழிகளிலான "முன்பள்ளிக் கல்வி" எனும் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வானது அரசடி தேவநாயகம் மண்டபத்தில் வைத்திய நிபுணர் வ.வரணீதரன் தலைமையில்   இடம் பெற்றது.

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட நிகழ்வானது நூலாசிரியரின் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வானது ஆரம்பமாகியது.எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் கலாநிதி ஓ.கே.குணநாதனின் நூல் வெளியீட்டு உரையினை தொடர்ந்து இரு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந் நூல்களின் முதல் பிரதியினை தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப் புரவலர் வீ.ரஞ்சித மூர்த்தி அவர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், அதிதிகளுக்கு நூலாசிரியரினால் சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப் பட்டதுடன், அதிதிகளின் சிறப்புரைகளை தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரை இடம் பெற்றதது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மூ.கோபாலரத்தினம் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும் சர்வதேச முன் பிள்ளைக் கல்வி அபிவிருத்தி ஆராச்சி நிறுவன பணிப்பாளர் கலாநிதி ஜெயலத் இலங்கக்கோன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சீ.பிரகாஷ், கிழக்கு பல்கலைக்கழக ஆரம்ப சௌக்கிய பீட தலைவர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வ.கருணைநாதன்,கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹீர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட நிகழ்வில் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
உலகத்திலேயே எமது இலங்கை திரு நாடானது கல்வியிலே முதன்மை இடத்தை வகிக்கின்றது எமது நாட்டின் கல்வித் திட்டதின் அத்திவாரம் என்பது மிக முக்கியமானதாகும் எமது நாட்டின் சிறார்களுக்கு தேவையாக இருக்கின்ற ஒரு  விடயம் கல்வி  எமது நாட்டின் கல்வித் திட்டம் முதன்மையானது - மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்
எந்த ஒரு விடயத்திற்க்கும் அத்திவாரம் என்பது மிக முக்கியமானதாகும். அதே மாதிரி கல்வித் திட்டத்திற்கும் அத்திவார செயற்பாடுகள் என்பது மிக முக்கிய மானதாகும் கல்வியுடன் இணைந்த இணை பாடவிதான செயற் பாடுகளே கல்வி செயற்பாட்டிற்கு முன்னிலை வைக்கின்றது.
 எமது நாட்டின் சிறார்களுக்கு தேவையாக இருக்கின்ற ஒரு கல்வி விடயம் ஆனது எமது நாட்டின் கல்வித் திட்டத்தில் முதன்மையானது. உலகத்திலேயே எமது இலங்கை திரு நாடானது கல்வியிலே முதன்மை இடத்தை வகிக்கின்றது. அறிவிலே இங்குள்ள தமிழர்கள் கல்விமான்களாக இருந்த காலம் என்பது நாங்கள் அனுபவரீதியாக அறிந்த உண்மைகள் ஆகும். எதிர்கால சமூகத்தினரும் கல்விமான்களாக ஒழுக்க சீடர்களாக வாழ்வதற்கு எமது நாட்டிலே இடம் இருக்கின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்
 தற்காலத்தில் வாசிப்பு பழக்கம் என்பது சிறுவர்கள் மத்தியில் குறைந்து கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் எமது நாட்டின் தற்போதைய கல்வித் திட்டம் சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்