மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு . வாசுதேவன் தலைமையின் கீழ் பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வழங்கி வைக்கப்பட்டன.

 













































ஷிவா

பிரித்தானியாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர்  ஒருவரின் நிதி அனுசரணையில் battimedia.lk   ஊடகத்தின் ஒழுங்கு படுத்தலில்  வெட்டுக்காடு மற்றும் ,இருதயபுரம் கிழக்கில் வெள்ள  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  பெண்கள் தலைமை தாங்கும் 50.குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு . வாசுதேவன் அவர்களின்  தலைமையின் கீழ் பிரதேச செயலகத்தில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வழங்கி வைக்கப்பட்டன.
 உதவி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக் அவர்களும் இதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார் .

வெள்ள  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட   பகுதிகளுக்கு  பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் ,மற்றும்  நிவாரணம்  சம்பந்தப்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர் .
மேலும் ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை நிறுவனர் திருமதி .கீதா சுதாகரன் , ஹெல்ப் எவர் தன்னார்வ நிறுவனத்தின் பணிப்பாளர் கீர்த்தனன் மற்றும்  நிறுவன அங்கத்தவர்கள் , மட்டக்களப்பின் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்  சஜீத்த்நாத் ஆகியோரும் நிகழ்வுக்கு சமூகமளித்து தங்களது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.