டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தளையைச் சேர்ந்த குறித்த யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் திஸாநாயக்க முதியன்செலாகே ஹாசினி பாக்யா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
யுவதியை பல்வேறு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்த வைத்தியர்கள் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளார்.





