க.பொ.த (சாதாரணதரத்தில்) மட்டு. வின்சென்ட் சாதனை!



(கல்லடி செய்தியாளர்)

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சைக்குத் தோற்றிய மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளில் 56 பேரும், மெதடிஸ்த மாணவர்களில் 14 பேரும், சென் மைக்கல் கல்லூரியில் 26 பேரும், சென் சிசிலியாஸ் கல்லூரி மாணவர்களில்  24 பேரும், கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவிகளில் 9 பேரும், கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களில் 5 பேரும், மகாஜனாக் கல்லூரி மாணவர்களில் 2 பேரும்,  கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம், குடியிருப்பு கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மாணவர்களில் தலா ஒவ்வொருவரும் ஒன்பது "ஏ" சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 139 மாணவர்கள் 9 "ஏ" சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.