மட்டக்களப்பு கல்லடி உப்போடை பிரதான சந்தியில் வீதிச் சமிஞ்ஞை விளக்கைப் பொருத்துக.. பொதுமக்கள் சம்பந்தப்பட்டோரிடம் கோரிக்கை!

 


மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை , விவேகானந்தா மகளிர் கல்லூரி , இராம கிருஷ்ண மிஷன் , சாரதா பாலர் பாடசாலை , சிவானந்தா பாடசாலை விடுதி , விளையாட்டு மைதானம் , வாசிக சாலை , பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அலுவலகம் , மணி மண்டபம் , துளசி கலாசார மண்டபம் , பேச்சி அம்மன் ஆலயம் , சித்தி விநாயகர்
கோவில் போன்ற 12 முக்கிய இடங்களுக்குச் செல்வதற்கான பிரதான பாதையாக புதிய கல்முனை வீதி அமையப் பெற்றுள்ளது ,
இப்பாதையூடாகப் பாடசாலை மாணவர்களும் , பாதசாரிகளும், வாகனங்களும் நாளாந்தம் பயணத்தினை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சிவானந்தா பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் நிறைவடையும் போது நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகின்றது.
இதன்போது அச்சத்துடனேயே மாணவர்கள் பாதையைக் கடக்க வேண்டியுள்ளது . இந்தச் சந்தியில் கடந்த காலங்களில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றது .
இந்நிலைமையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைக்கு முன்பாக உள்ள சந்தியில் சமிஞ்ஞை விளக்கைப் பொருத்துவது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இது விடயத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு சமிஞ்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.