2023ஆம் ஆண்டில், இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில் பதிவான விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துகள் இடம்பெறுவதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றது.” என்றார்.