ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது.

 


 மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.
ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப்பிரதேச செயலாளர் துலாஞ்சனன் கலந்துகொண்டதுடன் ஆலைய வழிபாட்டிலும் பூசைகளிலும் கலந்துகொண்டு ஆலையத்திற்கு தேவையான உதவிகளையும் கிராமத்திற்குள் உள்ள சிறு வீதிகளையும் முடிந்தளவுக்கு செப்பனிட்டுதருவதாகவும் தெரிவித்தனர்.