1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட உள்ளது

 


நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த சில நாட்களில் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்க அதிகாரிகளுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.