அரச ஊழியர்கள் 12-மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் புதிய சட்டம் வருகிறது

 


ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட்டு மணி நேர வேலைக் காலத்திற்குப் பிறகு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை இழக்கச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு 1 1/2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் பரிந்துரைத்துள்ளது.

 புதிய சட்டத்தின் மூலம் தொழிற்சங்கத்தை ஸ்தாபிப்பதற்காக 100 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதிய வேலைவாய்ப்பு சட்டம் ஒரு ஊழியர் ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

ஏற்கனவே 60 வயது வரை சேவையில் ஈடுபடுவதற்கு, ஒப்பந்தம் செய்து கொண்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தக் கூடாது என்றும் புதிய வேலைவாய்ப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.