இறப்பதற்கு முன்பு தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பானது முதலமைச்சரின் (டுவிட்டர்) தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது பொதுமக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அத்தோடு இது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருவோரின் எண்ணிக்கையை பெரும் அளவு உயர்த்தும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





