தனது மனைவி வேறொரு நபருடன் தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு நோக்கி சென்ற ரயிலுக்கு முன் குறித்த நபர் பாய்ந்த சம்பவமானது நேற்றிரவு ராஜ எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியதாகவும் அங்கு வேறொரு நபருடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.