கல்லடி செய்தியாளர்)
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (12) பல நூற்றுக்கணக்கானோர் புடைசூழ இடம்பெற்றது.
மேளவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஒலிக்க முருகப் பெருமான் அழகிய வடத்திலேறி அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைக் கண்ணாரக் காண மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.
நாளைய தினம் புதன்கிழமை (13) கல்லடி சமுத்திரத்தில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
இவ்வாலய உற்சவம் கடந்த திங்கட்கிழமை (04) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது