எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

 


முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு
கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டமைக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு எதிர்வரும் 07ஆம் திகதி அன்று வழக்கிற்காக சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.