தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா -2023











































கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமாக போற்றப்படும்   தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 2023.07.13 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .
கொடியேற்றத்தினைத் தொடர்ந்து  இந்த ஆலயத்தில்    21 நாட்கள் திருவிழாக்கள் வெகு சிறப்பாக இடம் பெற்றது .
கிழக்கின் சகல பிரதேசங்களில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு   வழிபாடுசெய்ய வருகை தந்திருந்தனர் .
நேற்றைய தினம் 2023.08.01 திருவிழா நிகழ்வு முனைக்காடு கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது

  2023.08.02.இன்று புதன் கிழமை  காலை வேளை  திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற  தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவதுடன்  மகோற்சவத்  திருவிழா இனிதே நிறைவு பெற்றது.