பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

 

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட
விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி மீண்டும் பாடசாலைகள் தொடங்கும்.

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.