சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

 


கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாலியபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில்  இருவரை  வியாழக்கிழமை(13) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்   .மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் சாலியபுர,பகுதியைச் சேர்ந்த 54 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் , அவர்கள் புதையல் தோன்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.