கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 


கைது செய்யப்பட்ட இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நேற்று முற்பகல் அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தரிந்து உடுவரகெதரவை பார்வையிடுவதற்கு புதுக்கடை பதில் நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று பிற்பகல்  அங்கு சென்றிருந்தார். இதன்போதே, தரிந்து உடுவரகெதர பிணையில் விடுவிக்கப்பட்டார்.