தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த தாய் .

 


அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் இதுவரை 1600 லீட்டர் தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் வசிப்பவர் எலிசபெத். இவர், ஹைப்பர்லாக்டேசன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது சராசரி தாய்ப்பால் சுரப்பை விட சுமார் 8 முதல் 10 மடங்கு அதிகமாக இவருக்கு பால் சுரக்கிறது.

 இவர், ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்வதாகவும், இதனால் பல குழந்தைகளின் பசியைப் போக்குவதாக கூறப்படுகிறது.

2 குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 1600 லீட்டர் தாய்ப்பாலை ஒரு வங்கிக்கு நன்கொடை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.