அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் நிவாரணத்தை மக்களுக்கு 
வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் 
கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மின்சாரக் கட்டணம் அதிகம். எரிபொருளின் விலை அதிகம்.
ஜனவரி
 1 ஆம் திகதி மின்சாரத் திருத்தத்திற்கான முன்மொழிவை நவம்பரில் தாருங்கள் 
என்று நான் சொல்கிறேன். இப்போது ஜூலையில் மேற்கொள்ளும் திருத்தத்தின் ஊடாக 
சில அளவில் குறையும். 0 – 30, 30 – 60, 60 – 90 வரையான குறைந்த பட்ச 
மின்சார அலகுகளை பயன்படுத்தும் குழுவிற்கு 27வீத மின் கட்டணத்தை குறைக்க 
முன்மொழிந்துள்ளோம். ஜனவரியில் இந்த திட்டத்தை கொண்டு வந்து மின் 
கட்டணத்திற்கு உறுதியான நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
 

 
 




 
 
 
 
.jpeg) 
