சர்வதேச நடன தினத்தினை முன்னிட்டு 700ற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஒன்றினைந்து நடாத்திய மாபெரும் நாட்டிய சங்கம நிகழ்வு நேற்று முன்தினம் (29) தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தினர் ஒருங்கிணைத்து நிகழ்த்தியிருந்தனர்.
தொடர்ச்சியாக நடனதின நிகழ்விலே நடன துறையில் சாதனைகளை புரிந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பல தேசங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்து செய்திகளும் பகிரப்பட்டதோடு பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.