வடக்கிற்கு சார்ள்ஸ் - கிழக்கிற்கு செந்தில் - புதிய ஆளுநர்கள் விபரம் கசிந்தது!


வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய கையோடு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல வடமேல் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநர்களாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். முன்னாள் எம்.பிக்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நவீன் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்கள் இவற்றுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.