ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காட்டுயானைகளில் இருந்து குடியிருப்புக்களை காப்பாற்றி தருமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!










(கனகராசா சரவணன் ;)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள  கண்ணகிகிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை உள்ள மக்களை  யானைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாறு கோரி கிராம மக்கள் செயலகத்தின் முன்னாள் வியாழக்கிழமை (09) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து  அழைப்பு விடுத்ததையடுத்து நூற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்றிணைந்தனர்

இதன் போது காட்டு யானைகளில் இருந்து எமது உயிர்களை காப்பாற்று, மின்சார வேலி அமை, யானைகளின் அட்காசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கு, வாழவிடு எமது ஊரில் வாழவிடு, யானைகளின் அட்காசத்தை நிறுத்த உடன் நடவடிக்கை எடு, வனஜீவி உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைகளை காடுகளுக்கு அப்புறப்படுத்தி மக்களை அச்சத்திலிருந்து மீட்டுத்தா,

காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வாக யானை வேலி அமைத்துத்தருமாறு போன்ற வாசங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கேஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் பின்னர்

உடனடித்தீர்வான ருமாறும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுக்காக மகஜரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் விங்கிய பின்னர் ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.