கல்லடி இக்னேசியஸில் தரம் -3 மாணவர்களின் கண்காட்சி!









(கல்லடி செய்தியயாளர்)


மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டில் தரம் மூன்று மாணவர்களின் 19 செயற்பாடுகளின் நிறைவில் நடைபெறும் கண்காட்சியும், மகிழ்வான கொண்டாட்டமும்
கடந்த வெள்ளிக்கிழமை (31) பாடசாலையின் தரம்- 3 வகுப்பறையில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தரம் மூன்று மாணவர்களினால் 19 செயற்பாடுகளின் போது உருவாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு பெற்றோரால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகள் இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில்,  ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், பிரதி அதிபர் உமாபரமேஸ்வரம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.