பாரிய டெங்கு சிரமதான நிகழ்வு













சம்மாந்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், ஏனைய சமூக அமைப்புக்களும் இணைந்து சம்மாந்துறை முழுவதும் பாரிய டெங்கு சிரமதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2023.01.06) காலை 8.00 மணி முதல் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.
இன்றைய தினம் அரச விடுமுறையாக இருந்த போதிலும் பிரதேச செயலாளரது தலைமைத்துவத்தின் கீழ் உதவி பிரதேச செயலாளரது வழிகாட்டல்களுக்கு அமைவாக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் நிர்வாக உத்தியோகத்தர் ,நிதி உதவியாளர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் சகல கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறையில் வசிக்கின்ற அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து பிரிவிலுள்ள சகல கிராம மட்ட அமைப்புக்களையும் இணைத்து இவ் டெங்கு சிரமதான நிகழ்வினை சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தார்கள்.