ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குளம் புனரமைப்பு.

 


ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சமூக அடிப்படையிலான சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின்கீழ், சம்பூரில் உள்ள பெரியகுளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு, நேற்று (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக  இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர். இக்குளத்தை ‘பீஸ் விண்ட்ஸ்’ நிறுவனம் சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.