ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

 


2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பில் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது

கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ் .பி .இரவிசந்திரா தலைமையில் நடைபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் நிர்வாகம் என் .சிவலிங்கம் , ,சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர்கள் ,ஆசிரியர் ஆலோசகர்கள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
.
2021ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் , வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்