ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .

 


அதிக லாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தினை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி குறித்த நிறுவனத்தின் ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று  திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.

வருடாந்தம் 110-120 வீதம் அதிக அளவில் லாபமீட்டும் குறித்த நிறுவனத்தினை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கோ அல்லது அதன் பங்குகளை பிரித்து வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுக்கக்கூடாது என வலியுறுத்தி குறித்த நிறுவனத்தின் ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் நிறுவனத்தில் பணிபுரியும் உட்கள மற்றும் வெளிக்கள ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.