காத்தான்குடியில் காணாமல் போன ஒருவர் 5 தினங்களில் பின்னர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு !!!




(கனகராசா சரவணன்)

கடந்த 22ம் திகதி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் 5 தினங்களின் பின்னர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள திருக்கொண்டியா கேணி ஆற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்தாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோண்டியாகேணி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பரமானந்தம் ராயு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 22ம் திகதி காணமல் போயுள்ள நிலையில் அவர் தொடர்பாக அவரது மனைவியார் 23 ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் குறித்த ஆற்றில் சடலம் ஒன்று மிகப்பதைகண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து குறித்த சடவத்தை மீட்டுபோது அவரது மனைவி தனது கணவர் என அடையாளம் காட்டியதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.