உள்ளூராட்சி தேர்தலை நடத்தி 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் 340 உள்ளுராட்சி அமைப்புகளும் நிறுவப்பட வேண்டும்.

 


2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் இலக்குடன் ஆணையகம் தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தேர்தல் ஆணையாளர்; எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகள் இருப்பதால், தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தங்களுக்கு நிதிப் பிரச்சனை எதுவும் இல்லை என்று புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.