2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் இலக்குடன் ஆணையகம் தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தேர்தல் ஆணையாளர்; எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகள் இருப்பதால், தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தங்களுக்கு நிதிப் பிரச்சனை எதுவும் இல்லை என்று புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.