கனடாவிற்கு புலம்பெயர்ந்து எவ்வித ஆவணங்களுமின்றி வாழந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை சாத்தியமாக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.





