ருத்ரா
எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் கிடக்கும்...?
¤. கிழக்கு:
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால்,
▪︎. வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.
▪︎.கிரக தோசம் நீங்கி ▪︎.லட்சுமி கடாட்சம் கிட்டும்.
▪︎. வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.
¤. தென்கிழக்கு:
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால்,
▪︎. குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். ▪︎.குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர்.
¤. தெற்கு:
வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.
▪︎. மரண பயம் உண்டாக்கும்.
வீட்டில் யாராவது ▪︎.இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.
¤. தென்மேற்கு:
இத்திசையில் தீபம் ஏற்ற,
▪︎. பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். ▪︎.திருமணத் தடங்கல்கள் நீங்கும்.
¤.மேற்கு:
இத்திசையில் தீபம் ஏற்ற,
▪︎. பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும்.
▪︎. கடன் தொல்லை நீங்கும்.
¤. வடமேற்கு:
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால்,
▪︎. சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். ▪︎.குடும்பச் சண்டைகள் நீங்கும்.
¤.வடக்கு:
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால்,
▪︎. நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். ▪︎.மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும்.
▪︎. திருமணம் கைகூடும்.
¤. வடகிழக்கு:
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் ,
▪︎.வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார்.
அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.