கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட சுருள் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள், கருப்பு நிற பேன்ட் மற்றும் கருப்பு நைக் ஷூவுடன் சாம்பல் நிற ஹூடி அணிந்து கடைசியாக காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.