யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது .

 


யாழில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மானிப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.