தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார்-

 


தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார். அரசை பணயக் கைதியாகப் பயன்படுத்துவதற்கு அவர் முற்படுகின்றார். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக் கூடாது. 

 புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்கு தயாராகவே உள்ளனர். அது நடக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசியல் காரணிகளை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நிதிக்காக அரசு அடிபணிந்து விடக்கூடாது” என்றார்.