மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

 




















 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது   பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02.09.2026 பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கெளரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான 
ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கலாநிதி எம்.எல்.எ.எம் ஹிஸ்புள்ளா மற்றும் இரா சாணக்கியன் ஆகியோருடன் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி கௌரவ தவிசாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள்   பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு திணைக்களங்கள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், 2026ம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 2026ம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும்
பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலை கள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.