மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பம்.

 

 

 

 









 

வரதன்

  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை இன்று நடைபெற்றது.

மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு  பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரிட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் முறையில் பரீட்சைகள் நடைபெற்றன.

 இந்த கல்வி வளையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட  பரிட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் 80 பரீட்சை நிலையங்கள் பாடசாலை மற்றும் தனிப்பட்ட  பரிட்சை எழுதுவோர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது

 இதில் 08 இணைப்பு பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் உயர்தர பரிட்சைக்கு இம்முறை  9809 பாடசாலை மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர்