2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்
தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை, இந்த
மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (03) முதல் இணையவழியூடாக விண்ணப்பங்கள் கோரப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





