தாதியர் கல்லூரி நிர்வாகிகள் ஐந்து பேர் பொலிசாரால் கைது.





வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் மாணவர்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இன்று அந்த பகுதியில் குழப்ப நிலை ஏற்ப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் கல்லூரி நிர்வாகிகள் எனக்கூறப்படும் ஐந்து பேரை கைதுசெய்தனர். அவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.